புதன், 4 நவம்பர், 2009

கோமாதாவின் பெருமை தெரியுமா





இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
  • பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் 
  • கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
  • சிரம் - சிவபெருமான்
  • நெற்றி நடுவில் - சிவசக்தி
  • மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
  • மூக்கினுள் - வித்தியாதரர்
  • இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
  • இரு கண்கள் - சந்திரர், சூரியர்
  • பற்கள் - வாயு தேவர்
  • ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
  • ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
  • மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
  • உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
  • கழுத்தில் - இந்திரன்
  • முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
  • மார்பில் - சாத்திய தேவர்கள்
  • நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
  • முழந்தாள்களில் - மருத்துவர்
  • குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
  • குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
  • குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
  • முதுகில் - உருத்திரர்
  • சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
  • அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
  • யோனியில் - ஏழு மாதர்கள்
  • குதத்தில் - இலக்குமி தேவி
  • வாயில் - சர்ப்பரசர்கள்
  • வாலின் முடியில் - ஆத்திகன்
  • மூத்திரத்தில் - ஆகாய கங்கை
  • சாணத்தில் - யமுனை நதி
  • ரோமங்களில் - மகாமுனிவர்கள்
  • வயிற்றில் - பூமாதேவி
  • மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
  • சடாத்களியில் - காருக பத்தியம்
  • இதயத்தில் - ஆசுவனீயம்
  • முகத்தில் - தட்சிணாக்கினி
  • எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
  • எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக